ஆப்நகரம்

பெண்களின் படங்களை மார்பிங் செய்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மொட்டை அடித்து தரும அடி

பெண்களை புகைப்படம் எடுத்து, அதை மார்பிங் செய்து அதை இணையதளத்தில் வெளியிட்ட இளைஞர்கள் மொட்டை அடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

Samayam Tamil 18 Nov 2018, 4:38 pm
அலிகார் : உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண்களை புகைப்படம் எடுத்து மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்ட இளைஞரை, பொதுமக்கள் பிடித்து தரும அடி கொடுத்ததோடு, அவருக்கு மொட்டை அடித்து தண்டனை கொடுத்துள்ளனர்.
Samayam Tamil youth


உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் வாகீல் என்ற இளைஞர் . அவர் அப்பகுதி பெண்களிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து, அதை மார்பிங் செய்து அதை இணையதளத்தில் வெளியிட்டதோடு, பெண்களை மிரட்டியும், ஆபாசமாக பேசியும் வந்துள்ளார்.

பெண்கள் பாலியல் தொல்லை செய்ததாக பல முறை அந்த இளைஞர் வாகீலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதை வாகீல் கண்டு கொள்ளாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்ததோடு, மொட்டை அடித்து, கரும்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வாகீலின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து ஆட்சியர் விசாரிக்க உத்தரவிட்டார்.

போலீஸார் விசாரணை நடத்தியதில் வாகீல் மீது குற்றம் இருப்பது தெரியவந்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்