ஆப்நகரம்

வேலூர் சாலை விபத்து: உறக்கமின்றி கார் ஓட்டுவோருக்கு ஒரு பாடம்!

வேலூரில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், 2 குடும்பத்தினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 14 Mar 2017, 12:26 am
வேலூரில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், 2 குடும்பத்தினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil vellore accident a lesson to sleepless driving people
வேலூர் சாலை விபத்து: உறக்கமின்றி கார் ஓட்டுவோருக்கு ஒரு பாடம்!


சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்[35]. சாஃப்ட்வேர் எஞ்சினியரான இவர் வார விடுமுறைக்காக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாப்பிரெட்டிப்பட்டிக்கு நேற்றுமுன்தினம் காரில் புறப்பட்டார். ராஜ்குமாரின் மனைவி நிரோஷா[30]. மகன் ஆதி[7] ஆகியோரும் காரில் உடன் சென்றனர்.

ராஜ்குமாரின் உறவினரான ராகேஷ் என்பவரும், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் அர்ச்சனா ஆகியோரும் அந்த காரில் சென்றனர். காரை ராகேஷ் ஓட்டி உள்ளார்.

வேலூர் அருகே பொய்கை என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ராகேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ராஜ்குமாரின் மனைவி நிரோஷா, மகன் ஆதி மற்றும் அர்ச்சனா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த கோர விபத்துக்கு காரை ஓட்டிய ராகேஷ் தூங்கியதே காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

வந்த வேகத்தில் கார் கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதி சிக்கிக் கொண்டது. அத்துடன், கார் மோதியது தெரியாமலேயே, கன்டெய்னர் லாரி டிரைவர் 200 மீட்டர் வரை ஓட்டி சென்றுள்ளார். பின்னர், பின்னால் கார் மோதியதை அறிந்து லாரியை நிறுத்தியுள்ளார்.

இந்த கோர விபத்துக்கு காரை ஓட்டிய ராகேஷ் தூங்கியதே காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சில நொடிகளில் இரண்டு குடும்பத்தினரையும் இந்த விபத்து சின்னாபின்னபடுத்தி விட்டது. கோடை காலம் பிறந்துவிட்ட நிலையில், விடுமுறையை கழிக்க பலர் இதுபோன்று நீண்ட தூர பயணங்களுக்கு திட்டமிட்டு இருப்பர். விபத்துக்களை தவிர்க்க, சில எளிய வழிமுறைகளை மனதில் வைத்து சென்றால் இதுபோன்ற விபத்துகளை நிச்சயம் தவிர்க்க முடியும்.

Vellore accident: a lesson to sleepless driving people.

அடுத்த செய்தி