ஆப்நகரம்

சிங்கத்தை அசிங்கப்படுத்தி வேடிக்கை பார்க்கும் கொடுமை

புகழ்பெற்ற குஜராத் கிர் காட்டு சிங்கங்களை இரக்கமின்றி கொடுமைப்படுத்தி வேடிக்கை பார்த்த ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 7 Jun 2018, 7:11 pm
புகழ்பெற்ற குஜராத் கிர் காட்டு சிங்கங்களை இரக்கமின்றி கொடுமைப்படுத்தி வேடிக்கை பார்த்த ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 64484585


குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 7 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கிர் கதாடா வனப்பகுதியில் ஒரு பெண் சிங்கத்திற்கு உயிருடன் ஒரு கோழியை சாப்பிடத் தருவது போல ஏமாற்றி வேடிக்கை பார்த்துள்ளனர். கோழியை ஒற்றை இறக்கையைப் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டி கொடுமைப்படுத்துவதுடன் சிங்கத்திடம் இறையைக் கொடுப்பதுபோல் போக்கு காட்டி விபரீத விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் புதன்கிழமை பரவியது. அதில் நீண்ட நேரம் சிங்கத்திடம் கோழியை இறையாகக் கொடுப்பது போல ஏமாற்றி வேடிக்கை பார்க்கிறார்கள். பின், ஒரு வழியாக அதனிடம் கோழியை கொடுத்ததும் அதைச் சிங்கம் கவ்விக்கொண்டு காட்டிற்குள் சென்றது.
Customize | Align | Deleteஇந்த ஆபத்தான விளையாட்டில் கோழியை கையில் வைத்து போக்கு காட்டியவரிடம் அருகில் இருப்பவர் சிங்கம் அவர்கள் மீது பாய்ந்து தாக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அந்த நபர் இது தினமும் நடப்பதுதான் என்று அலட்சியமாகச் சொல்கிறார்! அந்த வீடியோ எடுக்கப்பட்டபோது அங்கிருந்த பெண் ஒருவரும் பின்னிருந்து அவர்களை எச்சரிக்கிறார்.
சிங்கங்களுடன் இதுபோன்ற விபரீத விளையாட்டுகள் நடப்பது அபூர்வமல்ல. கடந்த மே 19ஆம் தேதி அனுமதி பெறாமல் நடத்தப்படும் சிங்கங்களின் சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பார்த்ததாக, அகமதாபாத்தைச் சேர்ந்த 4 சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேரை போலீசார் கைதுசெய்தனர்.

குஜராத்தின் பெருமையாக விளங்கும் கிர் காட்டு சிங்கங்களுடன் மனிதர்கள் இதுபோன்ற அற்ப சந்தோஷத்துக்காக விபரீதமான முறையில் விளையாடுவது வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்களை கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

அடுத்த செய்தி