ஆப்நகரம்

கத்துவா வன்கொடுமை: கொந்தளிக்கும் விஜய் சேதுபதி

பாலியல் வன்கொடுமைக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Apr 2018, 8:13 pm
பாலியல் வன்கொடுமைக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vijay-sethupathi-sexy-stills-049


ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் இன்று பங்கேற்ற விஜய் சேதுபதி, "கத்துவா துயரம் மனதிற்கு வலியையும், வேதனையையும் தருகிறது. பெண் குழந்தைகளை மதிப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களுக்கு படித்த சிலரே ஆதரவாக இருப்பது கோபத்தை உண்டாக்குகிறது.” என்றார்.

மேலும், “அம்மா, மகள் மனைவி, என எல்லோர் வீட்டிலுமே பெண்கள் இருக்கும் நிலையில், அவர்களை மதிப்பது எப்படி என்று பாடம் புகட்டுவது எப்படி என்றே தெரியவில்லை. பாலியல் வன்கொடுமைகளுக்கு எந்த தண்டணை கொடுத்தாலுமே அது போதாது என்றார் விஜய் சேதுபதி.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்