ஆப்நகரம்

ஒரு பெண்ணின் தற்கொலையால் பல லட்சம் லிட்டர் குண்ணீர் வீணடிப்பு

எய்ட்ஸ் பாதித்த பெண் ஒருவர் ஏரியில் தற்கொலை செய்துகொண்டதால் அந்த ஏரியில் நிறைந்திருந்த பல லட்சம் லிட்டர் நீர் முழுவதும் வெளியேற்றி வீணடிக்கப்பட்டிருக்கிறது.

Samayam Tamil 5 Dec 2018, 10:21 pm
கடந்த நவம்பர் 29ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள முராப் என்ற கிராமத்தில் இருக்கும் ஜகிர்தார் ஏரியில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil DtqKE3zVsAIiPfo


இதனால், எய்ட்ஸ் பாதிப்புள்ள பெண் குதித்து தற்கொலை செய்துகொண்டாதால் அந்த ஏரி நீர் மாசடைந்துவிட்டதாக ஊர் முழுவதும் தகவல் பரப்பப்பட்டிருக்கிறது. இதனால் குடிநீருக்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் பயன்பட்டுவந்த அந்த ஏரி ஊர் மக்கள் புறக்கணித்தனர். 3 கி.மீ. தொலைவிலிருந்து தண்ணீர் எடுத்துவரத் தொடங்கினர்.

இதனிடையே இது குறித்து அறிந்த அரசு அதிகாரிகள் வந்து ஏரியைப் பார்வையிட்டுள்ளனர். அந்த ஊர் மக்களைச் சந்தித்த அவர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் இறந்தவுடன் ஹெச்.ஐ.வி. கிருமிகளும் இறந்துவிடும் எனவும் நீரிலோ காற்றிலோ அவை உயிருடன் இருக்காது என்பதால் அந்த ஏரி நீர் பாதுகாப்பானதே என விளக்கியுள்ளனர்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த ஊர்மக்கள் ஏரி நீரை வெளியேற்றியே ஆக வேண்டும் என போராடியுள்ளனர். இதனால், 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றி வீணாக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி