ஆப்நகரம்

இருவரை மனிதக்கழிவு சாப்பிட வைத்த பயங்கரம்!!

ஒடிசாவில் மந்திராவாதிகள் இருவரை மனிதக் கழிவு சாப்பிட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 3 Sep 2016, 12:45 pm
ஒடிசாவில் மந்திராவாதிகள் இருவரை மனிதக் கழிவு சாப்பிட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil villagers forced to eat human excreta
இருவரை மனிதக்கழிவு சாப்பிட வைத்த பயங்கரம்!!


ஓடிஸா மாநிலத்தில் காஞ்சம் மாவட்டத்தில் உள்ள எஸ்பி ஜக்தேப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த காரியத்தை செய்தனர். அந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு சிறுவர்கள் பலியானார்கள். இவர்கள் இருவரும் பசுதேப் நாயக் மற்றும் பாஞ்ச்சா நாயக் இருவர் மேற்கொண்ட மந்திரத்தின் காரணமாகத்தான் இறந்தனர் என்று கிராமத்தினர் சந்தேகித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரின் பற்களை உடைத்து, அடித்து, மனிதக் கழிவுகளை சாப்பிட வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதிகளில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிர்ச்சியில் உறைந்த பாதிக்கப்பட்ட இருவரும் போலீசில் எந்தப் புகாரையும் செய்யவில்லை. போலீசார் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அந்த கிராமத்திற்கே சென்று இந்த காரியத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அடுத்த செய்தி