ஆப்நகரம்

வயிற்றுவலியால் வேதனை; தீக்குளித்து தற்கொலை செய்த கொண்ட சோகம்!

கடும் வயிற்று வலி காரணமாக, தற்கொலை செய்து நபரால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 11 Sep 2017, 10:35 am
விழுப்புரம்: கடும் வயிற்று வலி காரணமாக, தற்கொலை செய்து நபரால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil villupuram man suicide because of stomach pain
வயிற்றுவலியால் வேதனை; தீக்குளித்து தற்கொலை செய்த கொண்ட சோகம்!


விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சின்னக்கொழுவாரியை சேர்ந்தவர் ஞானசேகர்(37). இவருக்கு பல நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது.

இதனால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வயிற்று வலி குணமடையவில்லை.

இதனால் அவதியுற்ற அவர், கடந்த 8ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த அவரை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Villupuram Man suicide because of stomach pain.

அடுத்த செய்தி