ஆப்நகரம்

நாய் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பெண்களின் மீது கொடூர தாக்குதல்!

நாய் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பெண்களின் மீது கொடூர தாக்குதல்!

TOI Contributor 28 Sep 2016, 2:59 pm
புனே : கோத்ருட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நான்கு குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டது. ஆதரவற்ற அந்த நாய் குட்டிகளுக்கு அங்கு வசித்த ஒரு பெண்ணும், அவரது மகளும் அடைக்கலம் கொடுத்து வளர்த்துவந்தனர். அதே பகுதியில் வசிக்கும் மிலிந்த் கேல் என்பவர் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு நாய்களை அங்கிருந்து கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். நாய்களை எடுத்துச்செல்ல வந்த நகராட்சி ஆட்களிடம் அப்பெண், குட்டிகள் பிறந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ளது என்பதால் கொண்டு செல்ல வேண்டாம் என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.
Samayam Tamil viral video man beats mother and her daughter for sheltering street dogs
நாய் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பெண்களின் மீது கொடூர தாக்குதல்!


இதனை அறிந்த மிலிந்த் கேல் அந்தப்பெண்ணையும், அவரது மகளையும் ஷீவால் கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலில் அந்தப்பெண்ணின் பல் உடைந்துவிட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மிலிந்த் ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Man beats mother and her daughter for sheltering street dogs

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/yTY9iAM1U3E" frameborder="0"></iframe>

அடுத்த செய்தி