ஆப்நகரம்

வைரல் வீடியோ: எதுக்குடா போராடனும்? இளைஞர்களை கழுவி ஊற்றும் தமிழன்

எதுக்குடா போராடனும் எனக் கேட்டு, சக இளைஞர்கள், தமிழ் இளைஞர் ஒருவர் காரசாரமாக விமர்சிக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

TNN 31 Mar 2017, 2:30 pm
எதுக்குடா போராடனும் எனக் கேட்டு, சக இளைஞர்கள், தமிழ் இளைஞர் ஒருவர் காரசாரமாக விமர்சிக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
Samayam Tamil viral video why we should protest angry tamil youth criticizes
வைரல் வீடியோ: எதுக்குடா போராடனும்? இளைஞர்களை கழுவி ஊற்றும் தமிழன்


தமிழக விவசாயிகள் டெல்லியில், கடந்த 3 வாரங்களாக முற்றுகையிட்டு, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். தமிழக அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது.

இதையொட்டி, இளைஞர்கள், மாணவர்கள் சிலர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக, போராடியதைப் போல, சென்னை மெரினா கடற்கரை, கோவை வஉசி பூங்கா, மதுரை தமுக்கம் மைதானம் போன்ற இடங்களில் கும்பலாகக் கூடி போராட்டங்களை நடத்த, அழைப்பு விடுத்தனர்.

சமூக ஊடகங்களில் இந்த தகவல் வைரலாகப் பகிரப்பட்டது. எனினும், எதிர்பார்த்த கூட்டம், மெரினா கடற்கரை, வஉசி பூங்கா போன்ற இடங்களில் கூடவில்லை.

இந்நிலையில், இந்த போராட்ட அழைப்புகளை விமர்சித்து, இளைஞர் ஒருவர் பேசும் வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது பரவிவருகிறது. அதில், ஒரு இளைஞர், ‘’பொங்கல் விடுமுறை என்பதால், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த முடிந்தது. தற்போது தேர்வு நேரம். அதற்காக, மாணவர்கள் படிக்க வேண்டும். விவசாயிகள், அவர்களின் உடமைக்காகப் போராடுகிறார்கள். நமக்கு அது ஒரு பிரச்னை அல்ல,’’ என்றெல்லாம் பேசியுள்ளார்.

அந்த வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.


அடுத்த செய்தி