ஆப்நகரம்

ஆந்திராவில் இருந்து புறப்பட்ட ரயில் 4 ஆண்டுகளுக்குப் பின் உத்தரப்பிரதேசம் வருகை!!

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்ததைப் பார்த்து, ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 28 Jul 2018, 7:04 pm
லக்னோ: 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்ததைப் பார்த்து, ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Samayam Tamil ஆந்திராவில் இருந்து புறப்பட்ட ரயில் 4 ஆண்டுகளுக்குப் பின் உத்தரப்பிரதேசம் வருகை!!
ஆந்திராவில் இருந்து புறப்பட்ட ரயில் 4 ஆண்டுகளுக்குப் பின் உத்தரப்பிரதேசம் வருகை!!


பாஸ்தியைச் சேர்ந்த ராமச்சந்திர குப்தா என்பவர், இந்தியன் பொட்டாஸ் நிறுவனத்தின் சார்பாக, ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலிருந்து, உத்தரப்பிரதேச மாநிலம் பாஸ்தி வரை உரம் ஏற்றி வர ரயில் ஒன்றைப் புக் செய்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்ட அந்த ரயில் எதிர்பார்த்த நேரத்தில் பாஸ்திக்கு வரவில்லை. இதையடுத்து, ரயில்வே நிர்வாகத்திடம் இதுகுறித்து குப்தா புகார் அளித்துள்ளார். பல முறை புகார் அளித்தும் எவ்வித பதிலும் வராததால், ஒரு கட்டத்தில் அந்த வண்டி என்ன ஆனது என்பதை அறியும் ஆர்வத்தை இழந்தார்.

இந்நிலையில், இன்று அந்த ரயில் பாஸ்திக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆந்திராவில் இருந்து பாஸ்தி வர 42 மணிநேரமே ஆகும் நிலையில், இந்த வண்டி 4 ஆண்டுகள் கழித்து வந்து சேர்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையடுத்து, அதிலுள்ள சரக்கை குப்தா வாங்க மறுத்துள்ளார். ரயில்வே துறையின் தவறால் தனக்கு பல லட்சம் இழப்பு ஏற்கப்பட்டுள்ளதாகவும், இதைப் பெற்றும் எனக்குப் பயனில்லை, எனவே எனக்கு ரயில்வே துறை தக்க இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளையில், ரயில்வே அதிகாரிகள் எதனால் ரயில் வந்து சேர இத்தனை தாமதம் ஆனது என்பதை அறிய முயன்று வருகின்றனர். சில நேரங்களில் பெட்டிகள் ரயில்களில் இருந்து பிரிந்து சென்று விடுவதால், இது போன்ற நிகழ்வுகள் நடக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி