சாஹரன்பூர்: உத்தரப்பிரதிகேசம் மாநிலம் சாஹரன்பூர் எனும் பகுதியில் திருமண விழா ஒன்றில் டி.ஜே இசைத்த பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
தீபக் என்பவரது திருமண ஏற்பாடுகள் நேற்று இரவு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பாட்டுக் கச்சேரியில் இசைக்கப்பட்ட பாடல் குறித்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததையடுத்து, கூர்மையான ஆயுதத்தால் 3 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கைகலப்பில் ஈடுபட்ட 3 பேரை சாஹரன்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சாஹரன்பூர் காவல் கண்காணிப்பாளர் பிரபல் பிரதாப் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் படுகாயமடைந்த 3 பேரும் சாஹான்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
A wedding in Saharanpur turned ghastly after two groups clashed over the music played by the DJ, which left three persons injured, the police said on Tuesday.
தீபக் என்பவரது திருமண ஏற்பாடுகள் நேற்று இரவு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பாட்டுக் கச்சேரியில் இசைக்கப்பட்ட பாடல் குறித்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததையடுத்து, கூர்மையான ஆயுதத்தால் 3 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கைகலப்பில் ஈடுபட்ட 3 பேரை சாஹரன்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சாஹரன்பூர் காவல் கண்காணிப்பாளர் பிரபல் பிரதாப் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் படுகாயமடைந்த 3 பேரும் சாஹான்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
A wedding in Saharanpur turned ghastly after two groups clashed over the music played by the DJ, which left three persons injured, the police said on Tuesday.