ஆப்நகரம்

அரட்டைக்கு மட்டுமில்லாமல் சமூகத்தையும் வளர்க்கும் சமூக வலைத்தளங்கள்

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் அரட்டை அடிக்க மட்டுமில்லாமல், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்வதில் ஒரு பங்கு வகிக்கின்றன.

TNN 20 May 2017, 5:04 pm
இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் அரட்டை அடிக்க மட்டுமில்லாமல், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்வதில் ஒரு பங்கு வகிக்கின்றன.
Samayam Tamil whatsapp friends helps to manage drought
அரட்டைக்கு மட்டுமில்லாமல் சமூகத்தையும் வளர்க்கும் சமூக வலைத்தளங்கள்


இந்த வகையில் வரலாறு காணாத வறட்சி வாட்டி எடுத்து வரும் நிலையில், ஒரு கிராமத்தின் தண்ணீர் வறட்சிக்கு தீர்வு கண்டுள்ளது ஒரு வாட்ஸ் அப் குரூப்.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தாலுக்காவில் உள்ளது காணூர். வைகை ஆறுக்கு அருகில் உள்ள கிராமமாக இருந்தாலும் வறட்சி காரணமாக தண்ணீர் பிரச்னை அதிகமாக உள்ளது.



இந்த ஊரில் ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்ற வாட்ஸ் அப் குரூபில், அந்த ஊர் இளைஞர்கள், நண்பர்களாக இணைந்துள்ளனர். இதில் அரட்டை மட்டும் அடிக்காமல், ஊர் பிரச்னை குறித்தும் பேசியதில், ஊரின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடிவு செய்தனர். இதையடுத்து குரூப்பில் உள்ள நபர்கள் நிதி உதவி செய்ததில் ரூ 1.5 லட்சம் சேர்த்துள்ளனர். இதை வைத்து தண்ணீர் டாங்க் வாங்க முடிவு செய்தனர்.



இந்த தண்ணீர் டாங்கை, டிராக்டருடன் இணைத்து, வைகை ஆற்றுப்படுகையில் தண்ணீர் எடுத்து வந்து ஊர் தண்ணீர் பிரச்னையை தீர்த்துள்ளனர்.

அடுத்த செய்தி