ஆப்நகரம்

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தடுக்கி விழுந்தா தாறுமாறு!!

நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விஷயங்களை கடந்து செல்கிறோம். அதில் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களும் இருக்கும். ஆனால், நாம் அதை கவனத்தில் கொண்டிருக்க மாட்டோம்.

Samayam Tamil 17 Nov 2016, 6:38 pm
நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விஷயங்களை கடந்து செல்கிறோம். அதில் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களும் இருக்கும். ஆனால், நாம் அதை கவனத்தில் கொண்டிருக்க மாட்டோம். ஆனால், காலப்போக்கில் அத்தகைய விஷயங்கள், கோப்புகள் உள்ளிட்டவைகளில் இருந்தே அழிந்து விடும் அபாய கட்டத்திற்கு சென்று விடும்.
Samayam Tamil where history doesnt carry much weight
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தடுக்கி விழுந்தா தாறுமாறு!!


நாம் தடுக்கி விழும் இடத்தில், தாறுமாறான ஒரு வரலாற்றுப் பதிவு இருக்கும். அத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க விஷயங்களை வெளிக் கொண்டு வருவதே இந்த #TOIChennai #Chennaismostpreferrednewspaper டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் #stumbledupon தடுக்கி விழுந்தா தாறுமாறு பதிவு.

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு நம்மில் பலர் தினமும் செல்லக் கூடிய நபர்களாக இருப்பார்கள். ஆனாலும், அங்குள்ள சுவர்கள், பெஞ்சுகள், தூண்கள் உள்ளிட்டவைகளுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கும் இந்த பழங்கால எடை போடும் இயந்திரத்தை நம்மில் பலர் கவனித்திருக்க மாட்டோம்.

இதன் மேல், கால்களை வைத்து நின்றிருப்போம், நமது உடைமைகளை இதன் மீது வைத்திருப்போம். ஆனாலும், இந்த எஹ்.பூலே & சன்ஸ் நிறுவனத்தின் எடை போடும் இயந்திரத்தின் மீது தான் நமது கால்களையும், உடைமைகளுயும் வைத்துள்ளோம் என்பதை உற்று நோக்கியிருக்க மாட்டோம்.

இங்கிலாந்து நிறுவனமான எஹ்.பூலே & சன்ஸ் நிறுவனமானது, ரயில்வே நிலையங்களில் எடை போடும் இயந்திரங்களை கடந்த 1835-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது என்றும், தென்னிந்திய ரயில்வே சேவைக்காக லண்டனில் இருந்து தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது என்றும் வரலாற்று ஆர்வலர் கே.ஆர்.ஏ.நரசையா தெரிவித்துள்ளார்.


மேலும், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது, சென்னையின் ஒவ்வொரு புறநகர் ரயில் நிலையங்களிலும், இந்த எடை போடும் இயந்திரங்கள் வைக்கப்பட்டன. அந்த களத்தில் அதிகளவு பொருட்களை கொண்டு செல்லக் கூடிய ஒரே விரைவு போக்குவரத்தாக ரயில்கள் தான் இருந்தன.

அரிசி, தானியங்கள் என அனைத்தையும் ரயில்களில் தான் மக்கள் கொண்டு சென்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் கூடுதல் சுமைகளை இங்கு எடை போடப்பட்டு அதற்கு கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டது. அதற்காகவே இந்த எடை போடும் இயந்திரங்கள் ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டன. ஆனால், எந்த காலகட்டத்தில் இந்த இயந்திரங்கள், சென்னை பீச் - தாம்பரம் ரயில் சேவைப் பகுதியில் வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றும் கே.ஆர்.ஏ.நரசையா தெரிவித்துள்ளார்.

இதுபோன்று காலத்தின் போக்கில் அழிந்து வரும் விஷயங்கள், நாம் தடுக்கி விழும் இடத்தில் காணும் தாறுமாறான விஷயங்கள் குறித்து stumbledupon@timesgroup.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்தலாம்.
Where history doesn't carry much weight

அடுத்த செய்தி