ஆப்நகரம்

செல்பி: ராட்டினத்தில் பெண்ணின் தலைமுடி சிக்கியதால் நடந்த கொடூரம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்ஃபி எடுத்துக் கொண்டு இருக்கும்போது, ராட்சத ராட்டினத்தின் சக்கரத்தில் இளம்பெண்ணின் தலைமுடி சிக்கியதில், முடி முழுவதும் இழுத்து ரத்தம் வழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 11 Oct 2016, 4:03 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்ஃபி எடுத்துக் கொண்டு இருக்கும்போது, ராட்சத ராட்டினத்தின் சக்கரத்தில் இளம்பெண்ணின் தலைமுடி சிக்கியதில், முடி முழுவதும் இழுத்து ரத்தம் வழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil while taking selfie 16 year old girl hair got tangled in ferries wheel
செல்பி: ராட்டினத்தில் பெண்ணின் தலைமுடி சிக்கியதால் நடந்த கொடூரம்


உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை 16 வயது பெண் ராட்டினம் சுற்றிக் கொண்டு இருக்கும்போது, அதன் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இவரது முடி ராட்டினத்தின் சக்கரத்தில் சிக்கியது. சக்கரம் இழுத்ததில் தலைமுடி முற்றிலும் பிய்த்துக் கொண்டு வந்தது. தலையில் ரத்தம் வழிந்தது. அங்கே இருந்தவர்களும், ராட்டினத்தை இயக்கிக் கொண்டிருந்தவர்களும் விரைந்து செயல்பட்டு அவரை சக்கரத்தில் இருந்து விடுவித்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலையின் ஒரு பக்கம் முடியே இல்லமால் பிய்த்துக் கொண்டு வந்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி