ஆப்நகரம்

உல்லாசத்துக்கு மறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்

புதுக்கோட்டை அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 24 Oct 2016, 3:27 am
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil wife denied sex husband kill her
உல்லாசத்துக்கு மறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்


புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே கொல்லுப்பட்டியில் உள்ள குளத்தில் கடந்த 19-ந் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண், திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணாவளைவு வடக்குத்தெருவை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி பவானி(33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவரான செந்தில்குமாரை மாத்தூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் செந்தில் குமார்க்கும் பவானிக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. ஆனால் பவானிக்கும் செந்திலுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும் சில நாட்களாக பவானி செந்திலிடம் தாம்பத்திய உறவுக்கு மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில் அவரை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருக்க முயற்சி செய்துள்ளார் . பவானி அதற்கு மறுக்கவே அவரை கொலை செய்துவிட்டு ஒன்றும் நடக்காத்தது போல இருந்துள்ளார். மேலும் பவானி யாருடனோ ஒடிவிட்டாள் என நாடகமாடியுள்ளார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை கூறியுள்ளார்.

அடுத்த செய்தி