ஆப்நகரம்

ஒரே நாளில் ஜனமும், மரணமும்; கணவர் விபத்தில் மரணம்; மனைவிக்கு சுகப் பிரவசம்...!

ஒரே நாளில் ஒரு குடும்பத்தில் ஜனமும், மரணமும் நிகழ்ந்துள்ளது.

TNN 24 Jul 2017, 12:13 pm
வசாய்: ஒரே நாளில் ஒரு குடும்பத்தில் ஜனமும், மரணமும் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil wife gets male child when husband dies
ஒரே நாளில் ஜனமும், மரணமும்; கணவர் விபத்தில் மரணம்; மனைவிக்கு சுகப் பிரவசம்...!


மகாராஷ்டிர மாநிலம் வசாய் அருகே உள்ள பால்கரைச் சேர்ந்தவர் கிரண்(25). இவருடைய மனைவி கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் கிரண் தனது சரக்கு வேனில் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இன்ஜின் சூடானதால், வண்டியை நிறுத்தி விட்டு அமர்ந்திருந்தார்.

அவ்வழியே வந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரென சரக்கு வேன் மீது மோதியது. அதில் கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவிக்கு தெரிவிக்கப்படவே, அவர் அதிர்ச்சியில் கதறி அழுதார். இதனைத் தொடர்ந்து பிரசவ வலி ஏற்படவே, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல், மிகுந்த துயரத்தில் கிரணின் தவித்தார். தனது கணவரின் முகத்தை கடைசியாக முயற்சித்த அவருக்கு, அது முடியாமல் போனது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Wife gets male child when husband dies.

அடுத்த செய்தி