ஆப்நகரம்

கட்டாயத் திருமணத்தால் விபரீதம்; காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி!

கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 8 May 2018, 11:30 pm
அமராவதி: கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil Saraswati with her husband


ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிட்லபுடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரிசங்கர ராவ். இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, அதே மாவட்டம் வீரகட்லம் மண்டலை அடுத்த கடேகல்ல கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக சரஸ்வதிக்கு பேஸ்புக் மூலம் சிவா என்பவரும் நட்பு ஏற்பட்டது. அது காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால் சரஸ்வதியின் வீட்டில், அவரது உறவினர் கௌரிசங்கர ராவிற்கு கட் டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது காதலன் சிவா மற்றும் ஒரு ரௌடியுடன் சேர்ந்து கொண்டு, கணவரை கொல்ல சரஸ்வதி திட்டம் தீட்டியுள்ளார். 10 நாட்களுக்கு பிறகு, விழியநகரத்திற்கு ஷாப்பிங் சென்றுள்ளனர். பின்னர் ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தனர்.
தங்கள் கொலை திட்டத்தில் பணம், டீசல், விஸ்கி பாட்டில் கொடுத்து ஆட்டோ ஓட்டுநரையும் சேர்த்துக் கொண்டனர். ஓரிடத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, சரஸ்வதி சென்றுள்ளார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த சிவா மற்றும் ரௌடி இருவரும் இரும்பு கம்பியால் கௌரிசங்கர ராவை தாக்கி தப்பியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் அங்கு சரஸ்வதி எதுவும் தெரியாதது போல் கதறி அழுதுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், சரஸ்வதியின் கால் ரெக்கார்டை ஆய்வு செய்தனர். அதில் சிவா உடன் அதிக நேரம் பேசியது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், சரஸ்வதியின் கொலைத் திட்டம் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் கூட்டாளிகளும் கைதாகினர்.

Wife gives Engagement ring as Supari to kill her husband.

அடுத்த செய்தி