ஆப்நகரம்

கணவனின் மர்ம உறுப்பை கோபத்தில் மனைவி இழுத்ததால் நேர்ந்த விபரீதம்

ரோமன் நாட்டில் சர்வதேச பெண்கள் தினத்தன்று தனக்கு பூ கொடுக்காத மற்றும் வீட்டு வேலைகளில் உதவாத கணவனின் மர்ம உறுப்பை மனைவி பிடித்து இழுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 12 Mar 2016, 5:39 pm
ரோமன் நாட்டில் சர்வதேச பெண்கள் தினத்தன்று தனக்கு பூ கொடுக்காத மற்றும் வீட்டு வேலைகளில் உதவாத கணவனின் மர்ம உறுப்பை மனைவி பிடித்து இழுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil wife ripped off husbands testicles after he refused to do housework
கணவனின் மர்ம உறுப்பை கோபத்தில் மனைவி இழுத்ததால் நேர்ந்த விபரீதம்


ரோமானியாவின் வடகிழக்கில் உள்ளது டிரகோமிரஸ்தி என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மரிநேலா, பெண்கள் தினத்தன்று தனக்கு பூ கொடுக்கவில்லை என்று தனது 39 வயது கணவர் ஐயோநெல் போபாவை திட்டி தீத்துள்ளார். பின்னர், அவரை வீட்டு வேலைகளில் உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு கணவர் மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த போபா கணவனின் மர்ம உறுப்பை பிடித்து இழுத்துள்ளார். அதில், அவரது மர்ம உறுப்பு தொங்கியது. இதையடுத்து விரைந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதுகுறித்து மரிநேலா கூறுகையில், ''தொடர்ந்து இரவில் குடித்துவிட்டு வந்து வீட்டில் கலாட்டா செய்கிறார். பெண்கள்

தினத்தன்று எனக்கு பூவும் கொடுக்கவில்லை. வேலையிலும் உதவி செய்யவில்லை. நான் செய்ய வேண்டும் என்று இந்த தவறை செய்யவில்லை. எதார்த்தமாக நடந்துவிட்டது'' என்றார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

அடுத்த செய்தி