ஆப்நகரம்

கணவனின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

கணவனின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

TNN 10 Mar 2017, 4:20 pm
காசியாபாத் : கிச்சன் கத்தியால் கணவனின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
Samayam Tamil wife slashes mans private parts surrenders to cops
கணவனின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!


கோடா காலனியில் உள்ள வந்தனா என்க்ளேவில் கேப் ஓட்டுநர் ஒருவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. சம்பவத்தன்று விடியற்காலை வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் கணவர், குளித்துவிட்டு அறையை விட்டு வெளியே வரும் போது அப்பெண் பின்னால் இருந்து அவரது தலையில் கிரைண்டர் கல்லால் தாக்கியுள்ளார். தாக்குதல் காரணமாக நிலைகுலைந்து கீழே விழுந்த கணவனின் பிறப்புறுப்பை கிச்சனில் காய்கறி நறுக்க உபயோகப்படுத்தும் கத்தியால் வெட்டி அவரது மனைவி காயப்படுத்தியுள்ளார். பின்னர் கோடா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

படுகாயம் அடைந்த நிலையில் கிடந்த அவரை, அவரது நண்பர் ஒருவர் அருகில் உள்ள ஜேபி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆணுறுப்பின் அடிப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிக ரத்தம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் ஆணுறுப்பில் ஏற்பட்ட காயத்தை சரிசெய்துள்ளனர். மேலும் தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தாக்குதலின் காரணம் குறித்து காயம் அடைந்த கேப் ஓட்டுநரின் உறவினர் விளக்கம் அளித்துள்ளார். அதில், திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன பின்பும் இருவருக்கும் குழந்தை இல்லை என்பது பெரிய குறையாக இருந்துள்ளது. இதனால் அவ்வப்போது இரண்டு பேருக்கும் கடுமையாக சண்டையும் வந்துள்ளது. அதனால் தான் கணவனை தாக்கி, பிறப்புறுப்பை மனைவி வெட்டியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி