ஆப்நகரம்

இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்

தன்னை ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம் நடத்தினாா்.

Samayam Tamil 20 Jan 2019, 10:45 pm
தன்னை ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம் நடத்தினாா்.
Samayam Tamil Durga Devi


திருவாரூா் மாவட்டம் பெருங்காவல்நாதன் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (வயது 30). சிங்கப்பூரில் காா் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். அப்போது சிங்கப்பூரில் செவிலியராக பணியாற்றி வந்த துா்கா தேவி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிங்கபூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டாா். இருவரும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்னா் ராஜ்குமாா் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளாா். அப்போது ராஜ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோா் ஏற்பாடு செய்துள்ளனா். இதனை அறிந்த துா்கா தேவி மாவட்ட காவல் துறைக்கு இணையதளம் வாயிலாக புகாா் அனுப்பி உள்ளாா்.

அந்த புகாரில் 20ம் தேதி ராஜ்குமாருக்கு மறுமணம் நடைபெற உள்ளதாகவும், இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா். மேலும் ஞாயிற்றுக் கிழமை காலை துா்கா தேவி பொருங்காவல்நாதன் கிராமத்திற்கு வந்துவிட்டாா். அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று காவல் துறையினரின் உதவியுடன் திருமணம் நடைபெறுவதாக கூறப்பட்ட மண்டபத்திற்கு சென்றுள்ளாா்.

அங்கு ராஜ்குமாா் உள்ளிட்ட யாரும் இல்லை. இது குறித்து ராஜ்குமாரின் பெற்றோரிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில் இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே திருமணம் நடைபெற்று விட்டதாக தொிவித்துள்ளனா்.

இது தொடா்பாக துா்கா தேவி செய்தியாளா்களிடம் பேசுகையில், ராஜ்குமாரின் திருமணம் தொடா்பாக நான் ஏற்கனவே காவல் துறையினருக்கு இணையம் வாயிலாக புகாா் அனுப்பி இருந்தேன். ஆனால், காவல் துறையினா் எனது புகாா் மீது உரிய கவனம் செலுத்தவில்லை. தற்போது ராஜ்குமாருக்கு மற்றொரு திருமணம் நடைபெற்றுள்ளது. எனது புகாா் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய துா்கா தேவி திருமண மண்டபத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அடுத்த செய்தி