ஆப்நகரம்

ராக்கி வாங்க ரூ. 10 கொடுக்க கணவன் மறுப்பு: மனைவி தற்கொலை!!

அண்ணனுக்கு ராக்கி வாங்குவதற்காக 10 ரூபாய் கொடுக்க கணவன் மறுத்ததால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

TNN 8 Aug 2017, 6:22 pm
அண்ணனுக்கு ராக்கி வாங்குவதற்காக 10 ரூபாய் கொடுக்க கணவன் மறுத்ததால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil woman commits suicide after husband denies rs 10 for buying rakhee
ராக்கி வாங்க ரூ. 10 கொடுக்க கணவன் மறுப்பு: மனைவி தற்கொலை!!



கர்நாடகாவில் உள்ள பலகவி என்னும் இடத்தைச் சேர்ந்தவர் மகாதேவி கோள்ரா. இவருக்கு வயது 23. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அசோக்கிற்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். பல ஆண்டுகளாகவே அசோக்கிற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் காரணம் இல்லாமலே கோவப்படுவது அஇவரது வழக்கம்.


இந்த நிலையில் ராக்கி தினத்தை முன்னிட்டு தனது அண்ணனுக்கு ராக்கி வாங்கவேண்டும் என்று தனது கணவர் அசோக்கிடம் பத்து ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அவரோ தர முடியாது என்று மறுத்ததோடு தகாத வார்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, ஷஹாப்பூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு , கணவர் அசோக்கிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

woman commits suicide after husband denies rs.10 for buying rakhee

அடுத்த செய்தி