ஆப்நகரம்

மகளுக்கு கணவர்களால் தொல்லை; உடந்தையான போலீஸ் - சென்னையில் கண்ணீருடன் தாய், சிறுமி!

முன்னாள் கணவர்கள் மற்றும் போலீசாரால் பெரும் தொல்லை ஏற்பட்டுள்ளதாக தாய் மற்றும் சிறுமி ஆகியோர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 8 May 2019, 4:34 pm
சென்னை சூரபேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 26-11-2018ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில், எங்கள் வீட்டில் அம்மா, நான், சகோதரி, தம்பி ஆகியோர் உள்ளனர். முதல் கணவர் ஹேமந்த் உடன் 2017ல் என் அம்மா விவகாரத்து செய்துவிட்டார். பின்னர் ஜெயகரன் என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
Samayam Tamil Puzhal Mother Daughter


அவருடன் வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தது. இருவரின் பணத்தின் அம்பத்தூரில் அடுக்குமாடி வீடு வாங்கினோம். இதற்கிடையில் என்னிடம் ஜெயகரன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் அளிக்கத் தொடங்கினார். அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் பிரச்சனை வெடித்தது. ஒருநாள் ஜெயகரன் மற்றும் அவரது நண்பர்கள், 10 வழக்கறிஞர்கள் வீட்டிற்கு வந்து, லேப் டாப், செல்போன்கள், பென் டிரைவ், கார் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர்.

எங்களுக்கு செலவு செய்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு மிரட்டினர். இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் ஜெயகரன் தூண்டுதல் பேரில், முதல் கணவர் ஹேமந்த் மற்றும் அவரது உறவினர்களால் எங்களுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயகரன் எங்கள் மீது ஆன்லைனில் புகார் அளித்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி இன்ஸ்பெக்டர் நடராஜன் புழல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு எங்களை தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் இன்ஸ்பெக்டர் என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். எனவே அவர் மீதும், ஜெயகரன் மீதும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் நடராஜன் இதனை மறுத்துள்ளார்.

ஆனால் சம்பந்தப்பட்ட பெண் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அவர் ஜெயகரனுடன் வாழ விரும்பவில்லை என்றும், சொத்துகளை தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. அதில் தான் யார் குற்றவாளி என்று தெரியவரும்.

அடுத்த செய்தி