ஆப்நகரம்

"மர்ம உறுப்பு துண்டிப்பு" : மாணவி மீது குற்றம்சாட்டும் சாமியார்..!

தூங்கிக் கொண்டிருக்கும் போது தனது ஆணுறுப்பை மாணவி துண்டித்துவிட்டதாக கேரள சாமியார் குற்றம் சாட்டியுள்ளார்.

TNN 3 Jun 2017, 12:23 pm
தூங்கிக் கொண்டிருக்கும் போது தனது ஆணுறுப்பை மாணவி துண்டித்துவிட்டதாக கேரள சாமியார் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil woman cut off the penis of a 54 year old godman
"மர்ம உறுப்பு துண்டிப்பு" : மாணவி மீது குற்றம்சாட்டும் சாமியார்..!


சில வாரங்களுக்கு முன்னர், தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்த சாமியார் கணேஷானந்தாவின் ஆணுறுப்பை,சட்டக் கல்லூரி மாணவி துண்டித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தனது துணிச்சலான செயல்பாட்டிற்காக, அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்தன.

ஆனால் தனக்கு தானே ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டதாகவும், அந்த பெண்ணுக்கு எந்த பாலியல் தொல்லையும் அளிக்கவில்லை என சாமியார் கணேஷானந்தா தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில் சில வார சிகிச்சைக்கு பிறகு, இந்த சம்பவம் குறித்து அப்படியே தலைகீழாக வாக்குமூலம் அளித்துள்ளார் சாமியார் கணேஷானந்தா.

"நான் தூங்கிக் கொண்டிருந்த போதுதான், இந்த சம்பவம் நிகழ்ந்தது. நான் கண்ணை திறந்து பார்த்த போதுதான், அந்த பெண் அங்கு இருந்ததே எனக்கு தெரிந்தது.” என சாமியார் தெரிவித்துள்ளார். மேலும் தனது காதலனின் உதவியுடன் தான், அந்த பெண் இந்த காரியத்தில் ஈடுபட்டிருப்பார் எனவும் சாமியார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே தனது பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருப்பதாகவும், அவரின் தூண்டுதலின் பேரில்தான் சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுளதாகவும் அந்த பெண்ணின் தாய், காவல்துறை டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

woman cut off the penis of a 54-year-old Godman

அடுத்த செய்தி