ஆப்நகரம்

கருணைக் கொலை செய்ய பிரதமர் மோடிக்கு பெண் கடிதம்

கருணைக் கொலை செய்யுமாறு பிரதமர் மோடிக்கு மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

TNN 25 Sep 2016, 1:37 am
போபால்: கருணைக் கொலை செய்யுமாறு பிரதமர் மோடிக்கு மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil woman demands for euthanasia writes letter to pm modi
கருணைக் கொலை செய்ய பிரதமர் மோடிக்கு பெண் கடிதம்


மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலை சேர்ந்தவர் லட்சுமி யாதவ். மாற்றுத் திறனாளியான இவர் எம்.பில் மற்றும் எல்.எல்.எம் பட்டம் பெற்றவர். இவர் அரசு வேலைக்காக காத்திருந்து வேலை கிடைக்காமல் மன முடைந்ததால் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு, தன்னை கருணைக்கொலை செய்துவிடுமாறு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மத்திய பிரதேச மாநில அரசு மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு இருந்த போதிலும் எனக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. எனது இரண்டு கால்களையும் இழந்து எவ்வித வாழ்வாதாரமும் இன்றி மிகவும் சிரமத்தில் இருக்கிறேன். எனவே எண்ணை கருணைக் கொலை செய்ய அனுமதி தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அறிந்த அம்மானில் அமைச்சர் விஸ்வாஸ் சாரங், அரசு வேலை பெறுவதற்காக தேவையான பயிற்சி வகுப்புக்களுக்கு அப் பெண் செல்ல விரும்பினால் தான் உதவி செய்ய தயாராக இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி