சென்னை மெரினா கடற்கரை அருகே அரசுப்பேருந்தும் காரும் மோதி விபத்துக்கள்ளானதில், காரில் பயணம் செய்த 70 வயது மூதாட்டி பலியானார். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து பிராட்வேக்கு அரசு மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்து. சென்ற வேகத்தில், எதிர்திசையில் இருந்து வந்த காரில் திடீரென்று மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். உடனே அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காரில் பயணம் செய்த ஹேமாவதி (70) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடைய பேத்தி ஆனந்தி (29), கார் டிரைவர் வெங்கடேஷன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், அண்ணா சதுக்கம் நிலையத்தில் சிறை வைத்தனர். தப்பியோடிய டிரைவர் ராஜேந்திரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மெரினா சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து பிராட்வேக்கு அரசு மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்து. சென்ற வேகத்தில், எதிர்திசையில் இருந்து வந்த காரில் திடீரென்று மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். உடனே அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காரில் பயணம் செய்த ஹேமாவதி (70) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடைய பேத்தி ஆனந்தி (29), கார் டிரைவர் வெங்கடேஷன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், அண்ணா சதுக்கம் நிலையத்தில் சிறை வைத்தனர். தப்பியோடிய டிரைவர் ராஜேந்திரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மெரினா சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.