ஆப்நகரம்

வால்பாறை: சிறுத்தையுடன் சண்டைபோட்டு மகளைக் காப்பாற்றிய தாய்!!

வால்பாறையில் பெண் ஒருவர் தனது மகளை தாக்கிய சிறுத்தையை, விறகு கட்டையால் அடித்து துரத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 May 2018, 11:36 pm
கோவை: வால்பாறையில் பெண் ஒருவர் தனது மகளை தாக்கிய சிறுத்தையை, விறகு கட்டையால் அடித்து துரத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Samayam Tamil சிறுத்தையுடன் சண்டைபோட்டு மகளைக் காப்பாற்றிய தாய்!!
சிறுத்தையுடன் சண்டைபோட்டு மகளைக் காப்பாற்றிய தாய்!!


கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. 30 வயதுடைய முத்துலட்சுமி, தனது 11 வயது மகள் சத்யாவுடன் வீட்டின் பின்பக்கத்தில், விறகு கட்டைகளை சேகரித்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த சிறுத்தையொன்று, திடீரென மக ள் சத்யாவின் கழுத்தைக் கடித்து இழுத்துச் சென்றுள்ளது. இதைப்பார்த்து பதறிப்போன முத்துலட்சுமி, உடனே தன் கைகளில் இருந்த விறகுகட்டைகளால் சிறுத்தையை அடித்து, அங்கிருந்து விரட்டியுள்ளார்.

இதையடுத்து, தனது மகளை மீட்ட முத்துலட்சுமி, சிகிச்சைக்காக சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்நிலையில், இந்த விஷயம் அறிந்து வந்த வனத்துறையினர், சிறுத்தை கூண்டு வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி