ஆப்நகரம்

போலீசாரின் உதவியுடன் விபச்சார கும்பலிடமிருந்து தப்பிய பெண்

புனேயில் புத்வார் பேத் என்னுமிடத்தில் விபச்சார கும்பலிடம் மாட்டிய 26 வயது பெண் ஒருவர் போலீசாரின் உதவியுடன் சிறுமி உட்பட நான்கு பெண்களை காப்பாற்றியுள்ளார்.

TNN 15 Aug 2017, 4:57 pm
புனேயில் புத்வார் பேத் என்னுமிடத்தில் விபச்சார கும்பலிடம் மாட்டிய 26 வயது பெண் ஒருவர் போலீசாரின் உதவியுடன் சிறுமி உட்பட நான்கு பெண்களை காப்பாற்றியுள்ளார்.
Samayam Tamil woman flees brothel helps cops rescue four others
போலீசாரின் உதவியுடன் விபச்சார கும்பலிடமிருந்து தப்பிய பெண்


வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி பெண்களை வேறு இடத்திற்கு கடத்தி சென்று விபச்சாரத்தொழிலில் ஈடுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. அப்படித்தான் பெங்காலியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்த விபச்சார கும்பல் புனேக்கு கடத்திச்சென்று புத்வார் பேதிலுள்ள விபச்சார கும்பலிடம் விற்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது.
இந்த கும்பலிடமிருந்து தப்பிக்க அப்பெண் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. கடைசியாக மேற்கு வங்கத்திலுள்ள தன் பெற்றொரைத் தொடர்பு கொண்டு பேசி அதன்பிறகு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இறுதியில் புனேயைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஷ்யாம் காம்ப்ளேவிடம் இது குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டு அந்த பெண், சிறுமி உட்பட நான்கு பேரை மீட்டு மருத்துவமனையில் தற்போது அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து புனேயின் குற்றவியல் பிரிவு மூத்த ஆய்வாளரான சஞ்சய் பட்டில் குற்றவாளிகளை ​ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், இவர்களுக்கு வேறேதும் இடத்தில் தொடர்பு இருக்கிறதா என்று கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

Woman flees brothel, helps cops rescue four others

அடுத்த செய்தி