ஆப்நகரம்

மும்பையில் ஒரு கும்பலால் கணவன் முன் இளம்பெண் கற்பழிப்பு

மும்பையில் 8பேர் அடங்கிய கும்பலால் கணவன் முன் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

TNN 2 Nov 2016, 12:58 am
மும்பை : மும்பையில் 8பேர் அடங்கிய கும்பலால் கணவன் முன் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil woman gangraped in mumbai 7 arrested
மும்பையில் ஒரு கும்பலால் கணவன் முன் இளம்பெண் கற்பழிப்பு


மும்பைக்கு புதிதாக சென்ற தம்பதி தங்குவதற்கு ஒரு பெண்ணின் உதவியுடன் இடம் தேடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் தங்க எந்த ஒரு இடமும் கிடைக்காததால் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்க முடிவெடுத்தனர்.

வீட்டில் தங்கியிருந்த பொழுது அங்கு வந்த 8 பேர் அடங்கிய கும்பல், கணவனை கட்டிப்போட்டு, அவரின் கண்முன்னரே மனைவியை அந்த கும்பல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் குற்றத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை தேடிவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இயல்பு நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி