ஆப்நகரம்

வேறு வாலிபருடன் நெருக்கமாக இருந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த இளைஞன்

வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்த மனைவி கொலை செய்த இளைஞன் போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

TNN 30 Mar 2017, 3:02 pm
விழுப்புரம் : வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்த மனைவி கொலை செய்த இளைஞன் போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Samayam Tamil woman killedthe young men who had been close but killedconfessions
வேறு வாலிபருடன் நெருக்கமாக இருந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த இளைஞன்


விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சீர்பாதநல்லூரை சேர்ந்தவர் தளபதி (23). இவர் மனைவி பூமா (20).இவரை நேற்று முன்தினம் தளபதி கொலை செய்துள்ளார். கொலை தொடர்பாக போலீஸார் தளபதியை பிடிக்க தேடிவந்தனர். இதனால் தலைமறைவாக இருந்த தளபதி, அக்கிராம நிர்வாக அலுவலரின் முன்னிலையில் சரணடைந்தார்.

கொலை குறித்து தளபதி போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சீர்பாதநல்லூரை சேர்ந்த நான் 6ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதன் பின் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்று விட்டேன். அப்படி கரும்பு வெட்டும் வேலைபார்த்த போது, பூமாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தோம்.

இந்நிலையில் என் வீட்டில் இருக்கும் போது பூமாவுக்கும், என் அக்கா கனிமொழிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். சண்டை ஏற்படும்போதெல்லாம் என்னிடம் கோபித்துக்கொண்டு அவளின் அம்மா வீட்டுக்கு சென்று விடுவாள். பின் நான் அங்கு சென்று சமாதானம் செய்து கூட்டி வருவேன்.

இதுபோன்று சில தினங்களுக்கு முன், பூமா அவரின் அம்மா வீட்டுக்கு சென்றபோது அவரை அழைத்து வர சென்றேன். அப்போது, பூமா குளிக்க கிணற்றுக்கு சென்றிருப்பதாக கூறினர். அதனால் கிணறு உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றேன். அங்கு பூமா வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

என்னை பார்த்ததும், அந்த வாலிபர் ஓடி விட்டார், பூமாவும் தப்பித்து ஓட முயற்சி செய்தார், அவரை துரத்தி பிடித்து, துப்பட்டாவால், அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன். என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி