ஆப்நகரம்

திருமணம் பிடிக்காததால், வழிப்பறி நாடகம் மூலம் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி

சென்னையில் திருமணம் பிடிக்காததால், திருமணமான சில நாட்களில் வழிப்பறி திட்டத்தை தீட்டி கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 16 Oct 2018, 5:05 am
சென்னை : மனைவி வழிப்பறி திட்டம் தீட்டி, காதலன் அதை செயல்படுத்திய போது கொடூரமாக தாக்கப்பட்ட கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil anitha


அருப்புக் கோட்டையை சேர்ந்த கதிரேசன் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன் தூத்துக்குடி, விளாத்திக்குளத்தை சேர்ந்த அனிதாவுக்கும் இடையே திருமணம் நடைப்பெற்றது.

கணவனை தீர்த்து கட்ட திட்டம்:
இந்த திருமணம் பிடிக்காத அனிதா, தன் கணவரை தீர்த்துக்கட்ட, முன்னாள் காதலன் ஆண்டனி ஜெகன் மூலமாக, தான் தீட்டிய வழிப்பறி நாடகத்தை செயல்படுத்தினார்.

திருவான்மியூர் கடற்கரையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தங்களை வழிமறித்து தாக்கினர். 12 சவரன் நகையையும், செல்போனையும் பறித்துச் சென்றுவிட்டதாகவும், தடுக்க முயன்ற கதிரவனை இரும்புக் கம்பியால் மூன்று முறை தாக்கி விட்டு தப்பினர் என போலீஸில் அனிதா புகார் அளித்தார்.

போலீஸாரின் விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியானது. குற்றவாளிகளைப் பிடிக்க சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் ஆண்டனி ஜெகன், அனிதா கொலைக்கான திட்டம் செயல்படுத்தியது தெரியவந்தது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி பலியானார். அனிதாவையும், ஆண்டனி ஜெகனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்