ஆப்நகரம்

ரோட்டில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட தாய்; அழுகையுடன் இருந்த குழந்தை; அதிர்ந்த திருப்பூர்!

கொலையான தாய் அருகே அழுகையுடன் காணப்பட்ட தாயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

TNN 28 Sep 2017, 3:36 pm
திருப்பூர்: கொலையான தாய் அருகே அழுகையுடன் காணப்பட்ட தாயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Samayam Tamil woman murdered in public near tiruppur
ரோட்டில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட தாய்; அழுகையுடன் இருந்த குழந்தை; அதிர்ந்த திருப்பூர்!


திருப்பூர் அருகே கோவை - ஈரோடு சாலையில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரது அருகே ஆண் குழந்தை ஒன்று அழுகையுடன் காணப்பட்டது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பெண்ணின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனாதையான ஒன்றரை வயது ஆண் குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இறந்த பெண்ணும், ஆண் குழந்தையும் யார் என்பது குறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Woman murdered in public near Tiruppur.

அடுத்த செய்தி