ஆப்நகரம்

தங்க சங்கிலியை, கூழாங்கல்லாக மாற்றிய சாமியார் சென்னையில் கைது!

உடல் கோளாரை சரிசெய்வதாக கூறி, 6 பவுன் சங்கிலியை ஆட்டைய போட்டு, கூழாங்கல்லை நிரப்பிய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

TOI Contributor 29 Mar 2017, 2:31 pm
சென்னை : உடல் கோளாரை சரிசெய்வதாக கூறி, 6 பவுன் சங்கிலியை ஆட்டைய போட்டு, கூழாங்கல்லை நிரப்பிய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil woman opens vessel with gold chain after 7 months to find stones godman arrested
தங்க சங்கிலியை, கூழாங்கல்லாக மாற்றிய சாமியார் சென்னையில் கைது!


ஆவடியை சேர்ந்த 55 வயதான நாகம்மாள், கடந்த 7 மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் அவரின் பூக்கடையை சரியாக நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில், தன் உடல்நிலை பிரச்னை குறித்து, ராஜி என்ற பூக்கடை நடத்திவரும் பெண்ணிடம் நாகம்மாள் கூறியிருந்தார்.

நாகம்மாளின் உடலில் துஷ்டசக்திகள் இருப்பதால் மிகவும் கஷ்டப்படுத்துகிறது. அந்த துஷ்ட சக்திகளை நீக்க மாந்திரீகம் செய்யும் சாமியாரிடம் ஆலோசனை கேட்கலாம் என ராஜி தெரிவித்துள்ளார்.

சரி என ஏற்றுக்கொண்ட நாகலம்மாள், மாந்திரீகம் செய்யும் சாமியாரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஒரு பாத்திரத்தில் நாகலம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை போட சொன்னார். அதை வைத்து பூஜை நடத்தியதோடு, வீடு முழுக்க புகையை போட்டுள்ளார். அதோடு, அரைமணிநேரம் கண்களை மூடி தியானம் செய்யும் படிகூறியுள்ளார். அப்படி கண்ணை மூடி இருக்கும் போது, தங்க நகையை எடுத்து கூழாங்கல்லை வைத்துள்ளார்.

அதன் பின் உடல்நிலை சரியாகும் படி அந்த பாத்திரத்தை திறந்து பார்க்காமல் பூஜை அறையில் வைத்து பூஜிக்க நாகம்மாளிடம் கூறுமாறு ராஜியிடம் கூறியுள்ளார்.

இதன் காரணமாக 7 மாதங்களுக்கு பின் உடல்நிலை சரியான நாகம்மாள் அந்த பாத்திரத்தை திறந்து பார்த்த போது, அதில் இருந்த நகைக்கு பதிலாக கூழாங்கல் இருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து நாகம்மாள் போலீஸாரிடம் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீஸார் சாமியாரை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி