தருமபுரி : திருமணம் செய்வதாக கூறி குடும்பம்நடத்தி விட்டு வேறொரு திருமணம் செய்த போலீஸிடம் நீதிகேட்டு, பெண் போலீஸ் ஒருவர் சாகுவரை உண்ணாவிரத தர்ணா செய்தார்.
தருமபுரி, பொம்மிடியை சேர்ந்த ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரிய், பர்கூரை சேர்ந்த மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
தருமபுரி, அரூரை சேர்ந்த மலர் செல்வன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் 2008ல் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தனர். அப்போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இதைதொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மலர்செல்வன் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இதையறிந்த ராஜேஸ்வரி தன் உறவினர்களுடன், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த திருமணம் மண்டபம் முன்பு, தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குவந்த போலீஸார் அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி நீதி பெற்று தருவதாக கூறினர்.
தருமபுரி, பொம்மிடியை சேர்ந்த ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரிய், பர்கூரை சேர்ந்த மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
தருமபுரி, அரூரை சேர்ந்த மலர் செல்வன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் 2008ல் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தனர். அப்போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இதைதொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மலர்செல்வன் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இதையறிந்த ராஜேஸ்வரி தன் உறவினர்களுடன், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த திருமணம் மண்டபம் முன்பு, தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குவந்த போலீஸார் அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி நீதி பெற்று தருவதாக கூறினர்.