ஆப்நகரம்

15 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்த பெண்!

15 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்த பெண்!

TNN 29 Jan 2017, 10:04 pm
புதுச்சேரி : 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 35 வயது பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil woman sexually abuses class 10 boy in puducherry
15 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்த பெண்!


அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் சிறுவனுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு தாயான கிரிஜா எனும் பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அப்பெண் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சிறுவனின் டைரியை அவனுடைய அம்மா படித்தபிறகு, கிரிஜா சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவனின் அம்மா, கிரிஜாவை வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். பின்னர் குழந்தைகள் நலவாரியத்தில் புகாரும் அளித்துள்ளார்.

விசாரணையில் சிறுவனுக்கு சரும பிரச்னை இருப்பதும், அதனால் பள்ளியில் உள்ள தனது நண்பர்களால் அவன் கேலி செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. சிறுவனுக்கு உதவுவதாக கூறி கிரிஜா அவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுவனின் வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர் கிரிஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள கிரிஜாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதே போன்று மற்றொரு சம்பவம் அதே அரசு பள்ளியில் நடந்துள்ளது. 12 வயது சிறுவன் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கருப்பு தோட்டத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தை எடுத்துக்கொண்ட குழந்தைகள் நலவாரியத்தினர் சிறுவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி