ஆப்நகரம்

தற்கொலைக்கு முயன்று பாட்டியைப் போட்டுத் தள்ளிய வாலிபர்!

சென்னை : சென்னை அசோக் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று பெண்ணை சாகடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 29 Aug 2016, 7:07 pm
சென்னை : சென்னை அசோக் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று தூங்கி கொண்டிருந்த பாட்டியை சாகடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil woman sleeping outside her home in chennai dies after man attempting suicide falls on her
தற்கொலைக்கு முயன்று பாட்டியைப் போட்டுத் தள்ளிய வாலிபர்!


சென்னை அசோக் நகரில் வசிப்பவர் செல்வம், இவர் ஆட்டோ ஒட்டி வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருக்கும் இவருடைய மனைவிக்கு நேற்று இரவு சண்டை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செல்வம் தனது அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு சென்று தற்கொலை செய்வதற்காக குதித்துள்ளார்.

அப்போது கீழ் விட்டின் வேளியே தூங்கி கொண்டிருந்தார் சாரதா என்ற 70 வயதான பெண்மணி மீது செல்வம் விழுந்தார். அந்த சாரதா பாட்டியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது அந்த பாட்டிக்கும் , செல்வத்திற்கும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதன்பிறகு இருவரும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.

இந்த நிலையில் சாரதா பாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் செல்வத்திற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குமரன் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி