ஆப்நகரம்

குடிகார கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி; அதிர வைக்கும் காரணம் இதுதான்!

குடித்துவிட்டு படுத்திருந்த கணவரின் கழுத்தை நெரித்து மனைவி கொன்றுள்ளார்.

Samayam Tamil 16 May 2018, 7:35 pm
சென்னை: குடித்துவிட்டு படுத்திருந்த கணவரின் கழுத்தை நெரித்து மனைவி கொன்றுள்ளார்.
Samayam Tamil Murder
கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி


சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் சி கோபி(25). ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரின் மனைவி சுமித்ரா(22). இவர்களுக்கு 2 வயதான ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த திங்கள் அன்று இரவு, தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு திரும்பிய போது கணவர் சுய நினைவை இழந்து கிடந்ததாக சுமித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அவசர அவசரமாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் வரும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பிரேத பரிசோதனையில் கழுத்தில் கயிற்றின் அடையாளம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுமித்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் நன்றாக தூங்கி கொண்டிருக்கும் போது கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.

அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டி பி சத்ரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுமித்ராவை கைது செய்து, தொடர்பு வைத்திருப்பவரை தேடி வருகின்றனர்.

Woman strangles drunk husband in Chennai.

அடுத்த செய்தி