ஆப்நகரம்

கடன் தொல்லையால் விபரீதம்; விஷம் அருந்தி தாய் பலி; மகளுக்கு தீவிர சிகிச்சை!

திருச்சி: கடன் பிரச்சனை காரணமாக தாயும், பெண்ணும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 6 Dec 2018, 8:09 pm
திருச்சி கே.கே.நகர் களத்து வீடு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வெள்ளையம்மாள்(30). இவர்களுக்கு 4 வயதில் மித்ரா என்ற மகள் இருக்கிறாள்.
Samayam Tamil Suicide


தான் வசிந்த வந்த பகுதியில் உள்ள ஏராளமானோரிடம் முருகானந்தம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளார். அதனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் வெள்ளையம்மாள் மிகவும் வேதனை அடைந்துள்ளார். தனது கணவரிடம் விரைவாக கடனை திருப்பிச் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் அவர் கடனை அடைக்காததால், மீண்டும் கடன் கொடுத்த நபர்கள் கேட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த வெள்ளையம்மாள், தனது மகள் மித்ராவுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாள் உயிரிழந்தார். சிறுமி மித்ராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி