ஆப்நகரம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்ற பெண்ணுக்கு தர்ம அடி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்ற பெண்ணுக்கு தர்ம அடி!

TOI Contributor 12 Jan 2017, 1:07 am
ஆந்திரா : சித்தூர் மாவட்டம் மதனபல்லி மண்டலம் பகுதியை சேர்ந்த பாபு (30) என்பவருக்கும் சுகுணாவுக்கும் (28) ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாப கூலித்தொழிலாளியாக பணிபுரிகிறார். சுகுணா கட்டிட லேலை செய்துவருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள குரவப்பல்லி கிராமத்தை சேர்ந்த பொன்னையன் எனும் மேஸ்திரியிடம் சுகுணா சித்தாள் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
Samayam Tamil woman trying to kill her husband with boy friend
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்ற பெண்ணுக்கு தர்ம அடி!


சில தினங்களுக்கு முன்பு இது குறித்து பாபுவுக்கு தெரியவர சுகுணாவை கண்டித்து கடுமையாக தாக்கியுள்ளார். அதன்பிறகும் மேஸ்திரி பொன்னையன் உடனான சுகுணாவின் தொடர்பு நீடித்துள்ளது. பின்னர் சுகுணாவும், பொன்னையனும் திட்டம் தீ்ட்டி பாபுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாபுவை இரவு 10.30 மணியளவில், முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது பாபு அலறி சத்தம் போடவே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் பாபு வீட்டிற்கு ஓடிவந்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய பொன்னையன் மற்றும் சுகுணா பக்கத்தில் இருந்த வீட்டினுள் நுழைந்தனர். அதனை கண்டுபிடித்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து இருவரையும் மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சுகுணா மற்றும் பொன்னையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி