ஆப்நகரம்

துடிதுடித்து இறந்த குழந்தை- போதையில் இருந்த தாய் மீது வழக்குப் பதிவு!!

குழந்தை மூச்சுத்திணறி உயிரிழக்கும் போது, போதையில் இருந்த தாய் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2018, 6:57 pm
இங்கிலாந்தில் குழந்தை துடிதுடித்து சாகும்போது, போதையில் இருந்த தாய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil துடிதுடித்து இறந்த குழந்தை- போதையில் இருந்த தாய் மீது வழக்குப் பதிவு!!
துடிதுடித்து இறந்த குழந்தை- போதையில் இருந்த தாய் மீது வழக்குப் பதிவு!!


இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டேசி அட்கின்சன் என்ற பெண்மணி, மது அருந்திவிட்டு, போதையில் தூங்கியுள்ளார். அப்போது, அவரின் ஏழு மாதக்குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

மூச்சுத்திணறலில் குழந்தை துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையில், ஸ்டேசி போதையில் செம்ம மட்டையாகி உள்ளார். இதனிடையே, அவரின் குழந்தை மயங்கி, பரிதாபமாக உயிரிழந்தது.

இதைத் தொடர்ந்து, குழந்தையை கவனித்துக் கொள்வதில் அலட்சியமாக இருந்ததாக தெரிவித்து, இங்கிலாந்து போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்டேசிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி