ஆப்நகரம்

4 வயது சிறுமி வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை – பெண் கைது

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் 4வயது சிறுமியை வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற வழக்கில் ஆயிஷா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 13 Nov 2017, 12:21 pm
சென்னை : சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் 4வயது சிறுமியை வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற வழக்கில் ஆயிஷா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil women held murder 4 year old
4 வயது சிறுமி வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை – பெண் கைது


குன்றத்தூரில் உள்ள அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி கோசிகா என்ற 4 வயது குழந்தை இருந்துள்ளார்.

இவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகாரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரவணனுக்கும் அவரது பெண் தோழி ஆயிஷாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சரவணன் - ஜெயந்தி பிரிந்து இருப்பதால் குழந்தை கோசிகா தாயுடன் இருந்துள்ளார். இந்நிலையில் மகளை பார்க்க அனுமதிப்பதில்லை என ஜெயந்தியிடம் பஞ்சாயத்து செய்து, வாரத்திற்கு 2 நாட்கள் சரவணனுடன் குழந்தையை அனுப்பி வைக்க சம்மதித்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தையை சரவணனுடன் அனுப்பி வைக்கப்பட்டது. சனிக்கிழமை வேலூரில் உறவினரின் திருமணத்திற்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளார். அப்போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த குழந்தை மயக்கமடைந்து இறந்து விட்டதாக ஜெயந்திக்கு தெரிவிக்கப்பட்டது.

இது விபத்து அல்ல, கொலை என ஜெயந்தி, சரவணன் மீது போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் விசாரணையில், குழந்தையை சரவணனின் தோழி ஆயிஷா வாளி தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்றது தெரியவந்தது.

அடுத்த செய்தி