ஆப்நகரம்

ஃபினாயிலை குடிக்க வைத்து ”ராகிங் ”செய்த ’ரவுடி’ மாணவிகள்..!!

கர்நாடக மாநிலத்தில் முதலாமாண்டு மாணவியை ஃபினாயிலை குடிக்க வைத்து ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர் அதே கல்லூரியைச் சேர்ந்த சீனியர் மாணவிகள்.

TNN 21 Jun 2016, 7:09 pm
கர்நாடக மாநிலத்தில் முதலாமாண்டு மாணவியை ஃபினாயிலை குடிக்க வைத்து ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர் அதே கல்லூரியைச் சேர்ந்த சீனியர் மாணவிகள்.
Samayam Tamil women student ragged to consume toilet cleaner in karnataka
ஃபினாயிலை குடிக்க வைத்து ”ராகிங் ”செய்த ’ரவுடி’ மாணவிகள்..!!



கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அஸ்வதி என்ற மாணவி, ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள அல் குமர் நர்சிங் கல்லூரியில் முதல் வருட படிப்பில் சேர்ந்துள்ளார்.கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி ராகிங்கில் ஈடுபட்ட அக்கல்லூரியின் சீனியர் மாணவிகள்,அஸ்வதியை கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைத்துள்ளனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட சீனியர் மாணவிகளும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.


இந்த சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்கு பின்னர் தீவிர வயிற்றுவலியால் அவதிப்பட்ட அஸ்வதி, சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்ததால், அவரின் உணவுக்குழாய் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்னர் ஆறு மாதம் சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வதியின் குடும்பத்தினர்,அவரின் மருத்துவ செலவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.கல்லூரி சேர்ந்த முதல் நாள் முதல் அஸ்வதி ராகிங் செய்யப்பட்டுள்ளார் எனவும் ஆனால் தற்போது வரை அந்த கல்லூரி மீதோ,ராகிங்கில் ஈடுபட்ட மாணவிகள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி