சென்னை: குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்து நடத்தும் இந்த தாய்ப்பால் வாரம், கடந்த 1992ஆம் ஆண்டு முதன் முதலாக செயல்படுத்தப்பட்டு, தற்போது சுமார் 170 நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கருவில் இருந்து வெளிவரும் குழந்தையின் முதல் உணவாக இருக்கும் தாய்ப்பால் 'தங்க திரவம்' என்றழைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த முதல் 2 தினங்களில் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும். தாய்ப்பாலில் சரியான விகிதத்தில் கால்சியமும், பாஸ்பரஸ் உடன் நுண்சத்துக்கள் இருப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவத்தையும், உடல் மற்றும் மன அளவில் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதன் நோக்கமாகவும் உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. தாமதமான திருமணம், பணிக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட காரணங்களால், தாய்ப்பால் தருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மத்திய அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத கால விடுமுறை அளித்து பல்வேறு சட்டத்திட்டங்களை நடைமுறைபடுத்தினாலும், 40.5% தாய்மார்கள் தான் குழந்தை பிறந்த முதல் 60 நிமிடங்களுக்குள் தாய்ப்பால் தருகிறார்கள். 46.8% தாய்மார்கள் தான் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் சுமார் 18 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாக தாய்ப்பால் வழங்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் வருத்தமளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. பாரம்பரிய கலாச்சார மற்றும் உடல் ஆரோக்கிய அடிப்படையில், தாய்ப்பால் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்களும், குழந்தைகள் நல மருத்துவர்களும் கூறுகின்றனர்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் இடையே உளவியல் ரீதியான நெருக்கம் உண்டாகும் என்பதை உணர்ந்து ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்து நடத்தும் இந்த தாய்ப்பால் வாரம், கடந்த 1992ஆம் ஆண்டு முதன் முதலாக செயல்படுத்தப்பட்டு, தற்போது சுமார் 170 நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கருவில் இருந்து வெளிவரும் குழந்தையின் முதல் உணவாக இருக்கும் தாய்ப்பால் 'தங்க திரவம்' என்றழைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த முதல் 2 தினங்களில் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும். தாய்ப்பாலில் சரியான விகிதத்தில் கால்சியமும், பாஸ்பரஸ் உடன் நுண்சத்துக்கள் இருப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவத்தையும், உடல் மற்றும் மன அளவில் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதன் நோக்கமாகவும் உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. தாமதமான திருமணம், பணிக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட காரணங்களால், தாய்ப்பால் தருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மத்திய அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத கால விடுமுறை அளித்து பல்வேறு சட்டத்திட்டங்களை நடைமுறைபடுத்தினாலும், 40.5% தாய்மார்கள் தான் குழந்தை பிறந்த முதல் 60 நிமிடங்களுக்குள் தாய்ப்பால் தருகிறார்கள். 46.8% தாய்மார்கள் தான் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் சுமார் 18 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாக தாய்ப்பால் வழங்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் வருத்தமளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. பாரம்பரிய கலாச்சார மற்றும் உடல் ஆரோக்கிய அடிப்படையில், தாய்ப்பால் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்களும், குழந்தைகள் நல மருத்துவர்களும் கூறுகின்றனர்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் இடையே உளவியல் ரீதியான நெருக்கம் உண்டாகும் என்பதை உணர்ந்து ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.