ஆப்நகரம்

​ காதலன் வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில், அவரது தந்தை புகார் கொடுத்துள்ளார்.

TNN 24 Sep 2016, 10:22 pm
கடலூர்: காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில், அவரது தந்தை புகார் கொடுத்துள்ளார்.
Samayam Tamil young girl suicide in lovers home
​ காதலன் வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை


பெண்ணாடம் அருகே உள்ள தீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகன்யா(வயது 20). இவருக்கும், வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் செல்வத்துக்கும், சுகன்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுகன்யாவை கிராமத்தில் விட்டுவிட்டு, செல்வம் கேரள மாநிலத்துக்கு சென்றார். அங்கு அவர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.


இதற்கிடையே சுகன்யாவுக்கும், வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த உறவினரான பரமசிவம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். நாளடைவில் இந்த பழக்கம் அவர்களிடையே காதலாக மாறியது. இதையடுத்து சுகன்யா, பரமசிவத்தின் வீட்டிலேயே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சுகன்யா நேற்று முன்தினம், பரமசிவம் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரிடம் அந்த பெண்ணின் தந்தை காமராஜ் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்துமாறு கூறியிருந்தார்.இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி