ஆப்நகரம்

ஹிந்தியை தப்பு தப்பாக எழுதியதால் மாப்பிள்ளையை ரிஜெக்ட் செய்த பெண்!

ஹிந்தியை தப்பு தப்பாக எழுதியதால் மாப்பிள்ளையை ரிஜெக்ட் செய்த பெண்!

TNN 3 May 2017, 10:13 pm
டெல்லி : சில ஹிந்தி வார்த்தைகளை எழுத்துப்பிழையுடன் தப்பு தப்பாக எழுதியதால் திருமணத்திற்கு பார்த்தை இளைஞரை பெண் ஒருவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil young man fails hindi exam gets rejected by woman
ஹிந்தியை தப்பு தப்பாக எழுதியதால் மாப்பிள்ளையை ரிஜெக்ட் செய்த பெண்!


திருமணம் வரதட்சணையால் மற்ற சிலகாரணங்களால் நின்று போனதை கேள்விபட்டிருப்போம். ஆனால் வித்தியாசமான காரணத்தால் திருமணம் நின்றுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் மணிப்புரி மாவட்டம் குருவலி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், ஃபரக்காபாத் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு இருவரும் மணிபுரி நுமாய்ஷ் மைதானத்தில் பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்போது டைரி கொண்டு வந்த இளைஞர் பெண்ணிடம் சில ஹிந்தி வார்த்தைகளை எழுதச்சொல்லி இருக்கிறார். அந்த பெண்ணும் சரியாக எழுதிவிட்டார்.

பதிலுக்கு அந்தப்பெண் சில வார்த்தைகளை சொல்லி எழுதச்சொல்லவும் எல்லா வார்த்தைகளையும் அந்த இளைஞர் தப்பு தப்பாக எழுதியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் திருமணத்தை நிறுத்த சொல்லி உள்ளார். இதில் அந்த இளைஞர் 12ஆம் வகுப்பு படித்தவர் என்பதும், பெண் 5ஆம் வகுப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி