ஆப்நகரம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஈரோட்டில் திரளும் இளைஞர்கள்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு எதிரிவித்து ஈரோட்டில் போராட்டம் நடத்த இளைஞர்கள் திட்டமிட்டு வருவதாக சமூக வலைத்தளங்கள் தகவல் பரவுகிறது.

TNN 28 Feb 2017, 4:43 pm
ஈரோடு: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு எதிரிவித்து ஈரோட்டில் போராட்டம் நடத்த இளைஞர்கள் திட்டமிட்டு வருவதாக சமூக வலைத்தளங்கள் தகவல் பரவுகிறது.
Samayam Tamil youngsters to protest against neduvasal hydrocarbon project in tamilnadu
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஈரோட்டில் திரளும் இளைஞர்கள்


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக மக்களின் அனுமதி பெற்றே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரோட்டில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் இளைஞர்கள் வரும் வியாழக்கிழமையன்று திரள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடந்த அதே மைதானத்தில் விவசாயிகளுக்காக இளைஞர் ஒன்று திரள வேண்டும் என்றும் இந்த தகவலை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

அடுத்த செய்தி