ஆப்நகரம்

தாலி கட்ட செல்லும் போது, குளத்தில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றிய மணமகன்

கேமராவுடன் செல்போன் வந்ததிலிருந்து மனிதாபி மானம் குறைந்து செல்ஃபி எடுக்கும் ஆர்வம் மேலோங்கி விட்டது. அப்படி இல்லாமல் தன் திருமணத்திற்கு செல்லும் வழியில் குளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றி மணமகன் ரியல் ஹீரோவாகியுள்ளார்.

TNN 27 Sep 2017, 1:47 am
கேமராவுடன் செல்போன் வந்ததிலிருந்து மனிதாபி மானம் குறைந்து செல்ஃபி எடுக்கும் ஆர்வம் மேலோங்கி விட்டது. அப்படி இல்லாமல் தன் திருமணத்திற்கு செல்லும் வழியில் குளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றி மணமகன் ரியல் ஹீரோவாகியுள்ளார்.
Samayam Tamil your wife must be so proud internet hails canadian groom for saving boy from drowning
தாலி கட்ட செல்லும் போது, குளத்தில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றிய மணமகன்


ஆம், கனடாவில் விக்டோரியா பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு திருமணம் நடந்தது. இந்த திருமண நாயகன ஆண்டாரியோ என்பவர் தன் திருமணத்திற்காக விழா நடக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் புகைப்பட கலைஞரும் படங்களை எடுக்க சென்று கொண்டிருந்தனர்.

அப்போது விக்டோரியா பூங்கா அருகே உள்ள ஒரு குளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த ஒரு சிறுவன் நண்பனை காப்பாற்ற உதவிக்கு அழைத்துள்ளார்.

அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற ஆண்டாரியோ, உடனே இறங்கி, திருமண கோட் சூட் போட்டுள்ளதை கூட மறந்து குளத்தில் குதித்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

இந்த நிகழ்வை, ஆண்டாரியோவுடன் சென்ற புகைப்பட கலைஞர், இந்த சம்பவத்தை ஒன்று விடாமல் தன் கேமராவில் பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.





இந்த காலத்தில் யாராவது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கையில் அவரை காப்பாற்றுவதை விடுத்து, அந்த இடத்தில் செல்ஃபி எடுக்கும் வறுத்தத்திற்குரிய கலாச்சாரம் வளர்ந்துகொண்டிருக்கின்றது. ஆனால் இன்னும் மனிதம் சாகவில்லை என்பதை இதுபோன்ற நபர்கள் உணர்த்திக்கொண்டு தான் உள்ளனர்.

அடுத்த செய்தி