ஆப்நகரம்

பெண் கூட பழகனத்துக்கு சரமாரி வெட்டு; பேசும் திறனை இழந்த வாலிபர்

பெண்ணுடன் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு சரமாரி வெட்டு விழுந்துள்ளது.

TNN 6 May 2017, 2:22 pm
சென்னை: பெண்ணுடன் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு சரமாரி வெட்டு விழுந்துள்ளது.
Samayam Tamil youth attacked by the group for speak with a girl in chennai
பெண் கூட பழகனத்துக்கு சரமாரி வெட்டு; பேசும் திறனை இழந்த வாலிபர்


சென்னை ஜாபர்கான் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அனுத் குமார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகியுள்ளார். அப்பெண்ணுடன் வேறு சிலர் பழகி வந்துள்ளனர். இதற்கிடையில் பெண்ணுடன் பழகியவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனுத் குமார், கோவில் ஒன்றில் வாசலில் படுத்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அனுத் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், அனுத்குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் கழுத்து நரம்பு அறுந்து போனதால், அவருக்கு பேசும் திறன் பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அசோக், சுபாஷ், தங்கராஜ், ஜாகிர்கான், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youth attacked by the group for speak with a girl in Chennai.

அடுத்த செய்தி