ஆப்நகரம்

பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, உதட்டை கடித்து துப்பிய கொடூர இளைஞன்

வண்ணப் பொடிகளை பூசி வந்த ஒரு நபர், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதோடு, அவரின் உதடை கடித்து துப்பி தப்பியோடியுள்ளார்.

TNN 18 Mar 2017, 7:08 pm
மும்பை : வண்ணப் பொடிகளை பூசி வந்த ஒரு நபர், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதோடு, அவரின் உதடை கடித்து துப்பி தப்பியோடியுள்ளார்.
Samayam Tamil youth forcibly kisses woman bites lip off
பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, உதட்டை கடித்து துப்பிய கொடூர இளைஞன்


மும்பை, சியோன் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மதியவேளையில்,தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
கடந்த வியாழன் அன்று ஹோலி பண்டிகை கொண்டாடியதை போன்று, உடல் முழுக்க வண்ணப்பொடிகளை பூசி வந்த ஒரு மர்ம இளைஞன், அந்த பெண்ணை பிடித்து, முத்தமிட முயன்றுள்ளார். அந்த பெண் தடுத்தும், வலுக்கட்டாயமாக முத்தமிட்ட அந்த இளைஞன், பெண்ணின் உதட்டை கடித்து துப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி சிசிடிவி வீடியோ வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி