ஆப்நகரம்

சிங்கம் அடைக்கப்பட்ட பகுதியில் குதித்த வாலிபர் மீட்பு!

திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் அடைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்த முருகன் என்ற வாலிபர் சிங்கத்தின் பிடியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

Samayam Tamil 22 Feb 2018, 1:31 pm
திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் அடைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்த முருகன் என்ற வாலிபர் சிங்கத்தின் பிடியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
Samayam Tamil youth jumped into trivandrum zoological park
சிங்கம் அடைக்கப்பட்ட பகுதியில் குதித்த வாலிபர் மீட்பு!


திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் நேற்று வழக்கம் போல் ஏராளமான பார்வையாளர்கள் பார்வையிட்டு கொண்டிருந்தனர். அப்போது, சிங்கம் இருந்த பகுதிக்கு பார்வையாளர்கள் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று முருகன் (33) வாலிபர் ஒருவர் தடுப்புவேலியை தாண்டி குதித்தார்.

வாலிபர் ஒருவர் குதித்தைப் பார்த்ததும் அங்கிருந்த பெண் சிங்கம் ஒன்று அவரை நோக்கி ஓடி வந்தது. சிங்கத்திடம் வாலிபர் மாட்டிக்கொண்டதைக் கண்டு பொதுமக்கள் கூச்சலிட்டு அங்கிருந்த ஊழியர்களை அழைத்தனர்.

பின்னர், சிங்கத்தின் கவனத்தை திசை திருப்பிய பூங்கா ஊழியர்கள், முருகனை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே முருகனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டிருந்த நிலையில், அவர் எதற்காக சிங்கம் இருக்கும் இடத்தில் குதித்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி