ஆப்நகரம்

குழாயடி சண்டையை தடுத்த இளைஞர் அடித்து கொலை

மாமல்லபுரம் அருகே பெண்களின் குழாயடி சண்டையை தடுத்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 26 Apr 2017, 10:29 pm
காஞ்சிபுரம் : மாமல்லபுரம் அருகே பெண்களின் குழாயடி சண்டையை தடுத்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil youth killed in mamallapuram
குழாயடி சண்டையை தடுத்த இளைஞர் அடித்து கொலை


காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிகாட்டைச் சேர்ந்தவர் செல்வம். அவரது வீட்டின் பக்கத்தில் தேவன் என்பவர் வசித்து வந்தனர். இந்தநிலையில் தேவனின் மருமகள் தரணிக்கும், செல்வத்தின் மனைவிக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை செல்வத்தின் மகன் மணி தடுக்க முயன்றார். அப்போது, தேவன் அவரது மகன் ராமு , மருமகள் தரணி ஆகியோர் இணைந்து மணியை தாக்கியுள்ளனர். அவரது தாக்குதலுக்குள்ளான மணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தேவன், ராமு, தரணி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

youth-killed mamallapuram

அடுத்த செய்தி